×
Thursday 8th of May 2025

அங்காளம்மா எங்கள் செங்காளம்மா பாடல் வரிகள்


உள்ளடக்கம்

Angalamma Engal Sengalamma Lyrics in Tamil

அங்காளம்மா எங்கள் செங்காளம்மா..

அங்காளம்மா எங்கள் செங்காளம்மா..
மங்களம் பொங்கிட மனதில் வந்திடும்
மாரியம்மா.. கரு மாரியம்மா..

சிங்காரி ஒய்யாரி செம்பவளக் கருமாரி..
சிங்கத்தின் மீதேறி பவனி வரும் ஓங்காரி..

சிங்காரி ஒய்யாரி செம்பவளக் கருமாரி..
சிங்கத்தின் மீதேறி பவனி வரும் ஓங்காரி..
மஞ்சளிலே நீராடி, நெஞ்கினிலே உறவாடி..
மஞ்சளிலே நீராடி, நெஞ்கினிலே உறவாடி..
தஞ்சமென்று வந்தோமடி கெஞ்சுகிறோம் உன்னையடி..

அங்காளம்மா எங்கள் செங்காளம்மா..
மங்களம் பொங்கிட மனதில் வந்திடும்
மாரியம்மா.. கரு மாரியம்மா..
கரு மாரியம்மா..

நாகத்தில் மீதமர்ந்து காட்சி தரும் அலங்காரம்..
நாயகியே உன்னைக் கண்டால் நாவில் வரும் ஓங்காரம்..
பாசமெனும் மலரெடுத்து ஆசையுடன் மாலை தொடுத்து..
நேசமுடன் சூட்ட வந்தோம் மாசில்லாத மாரியம்மா..

அங்காளம்மா எங்கள் செங்காளம்மா..
மங்களம் பொங்கிட மனதில் வந்திடும்
மாரியம்மா.. கரு மாரியம்மா..
கரு மாரியம்மா..

தென் பொதிகை சந்தனம் எடுத்து,
மஞ்சளுடன் குங்குமம் சேர்த்து,
பன்னீரும் அபிஷேகம் செய்ய வந்தோம் மாரியம்மா..
அன்னையாக நீ இருந்து, அருளென்னும் பாலைத் தந்து,
இன்பமுடன் வாழ வைப்பாய் ஈஸ்வரியே மாரியம்மா..

அங்காளம்மா எங்கள் செங்காளம்மா..
மங்களம் பொங்கிட மனதில் வந்திடும்
மாரியம்மா.. கரு மாரியம்மா..
கரு மாரியம்மா..

Also, read: Melmalayanur Temple History in Tamil – அங்காள பரமேஸ்வரி கோவில் வரலாறு


 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • ஏப்ரல் 5, 2025
அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவில், ஆனைமலை
  • ஏப்ரல் 1, 2025
பக்த மீராபாய்
  • ஏப்ரல் 1, 2025
அன்னை அன்னபூர்ணா மரகத மணிமாலை